சனி, டிசம்பர் 10

திருக்குறளும் அதன் விளக்கமும்}}}}}}311-330

அறத்துப்பால் துறவறவியல் இன்னாசெய்யாமை ;;;;;;;;;;;


குறள் 311: 
சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா 
செய்யாமை மாசற்றார் கோள். 


விளக்கம் : 
 மிகுந்த செழிப்பைத் தருகின்ற செல்வத்தைப் பெறக் கூடுமென்றாலும் அதன் பொருட்டுப் பிறருக்குப் கேடு செய்யாமலிருப்பதே மாசற்றவர்களின் கொள்கையாகும்.


குறள் 312: 
கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா  
செய்யாமை மாசற்றார் கோள். 


விளக்கம் : 
சினங்கொண்டு சொல்லாலோ செயலாலோ ஒருவன் துன்பம் தரும்போது அந்தத் துன்பத்தை அவனுக்குத் திரும்பச் செய்யாமல் தாங்கிக் கொள்வதே சிறந்த மனிதரின் கொள்கையாகும்.


குறள் 313: 
செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின் 
உய்யா விழுமந் தரும். 


விளக்கம் : 
யாருக்கும் கேடு செய்யாமல் இருப்பவருக்குப் பகைவர் கேடு செய்துவிட்டால் அதற்குப் பதிலாக அவருக்கு வரும் கேடு மீளாத் துன்பம் தரக் கூடியதாகும்.


குறள் 314: 
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண 
நன்னயஞ் செய்து விடல். 


விளக்கம் : 
நமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டிப்பதற்குச் சரியான வழி, அவர் வெட்கித் தலைகுனியும்படியாக அவருக்கு நன்மை செய்வதுதான்.




குறள் 315: 
அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய் 
தந்நோய்போல் போற்றாக் கடை. 


விளக்கம் : 
பிற உயிர்களுக்கு வரும் துன்பத்தைத் தம் துன்பம் போலக் கருதிக் காப்பாற்ற முனையாதவர்களுக்கு அறிவு இருந்தும் அதனால் எந்தப் பயனுமில்லை.


குறள் 316: 
இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை 
வேண்டும் பிறன்கண் செயல். 


விளக்கம் : 
ஒருவன் தன்னுடைய வாழ்க்கையில் துன்பமானவை என்று அனுபவித்து அறிந்தவற்றை, மற்றவர்க்குச் செய்யாமலிருக்க வேண்டும்.


குறள் 317: 
எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம் 
மாணாசெய் யாமை தலை. 

விளக்கம் : 
எவ்வளவிலும், எப்பொழுதும், எவரையும் இழிவுபடுத்தும் செயலை மனத்தால் கூட நினைக்காமல் இருப்பதே முதன்மையான சிறப்பாகும். 

குறள் 318: 
தன்னுயிர்ககு ஏன்னாமை தானறிவான் என்கொலோ 
மன்னுயிர்க்கு இன்னா செயல். 

விளக்கம் : 
பிறர் தரும் துன்பத்தால் தனக்கேற்படும் துன்பத்தை உணர்ந்தவன் அந்தத் துன்பத்தைப் பிற உயிர்களுக்குத் தரவும் கூடாதல்லவா?.


குறள் 319: 
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா  
பிற்பகல் தாமே வரும். 

விளக்கம் : 
பிறருக்குத் தீங்கு விளைவித்துவிட்டோம் என்று ஒருவர் மகிழ்ந்து கொண்டிருக்கும்போதே, அதேபோன்ற தீங்கு அவரையே தாக்கும்.

குறள் 320: 
நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார் 
நோயின்மை வேண்டு பவர். 

விளக்கம் : 
தீங்கு செய்தவருக்கே தீங்குகள் வந்து சேரும்; எனவே தீங்கற்ற வாழ்வை விரும்புகிறவர்கள், பிறருக்குத் தீங்கிழைத்தல் கூடாது.


அறத்துப்பால் துறவறவியல் கொல்லாமை;;;;;;;;;;;;;;;;;;;;;


குறள் 321: 
அறவினை யாதெனின் கொல்லாமை கோறல் 
பிறவினை எல்லாந் தரும். 


விளக்கம் : 
எந்த உயிரையும் கொல்லாதிருப்பதே அறச்செயலாகும். கொலை செய்தல் தீயவினைகள் அனைத்தையும் விளைவிக்கும்.


குறள் 322: 
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் 
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை. 


விளக்கம் : 
இருப்போர் இல்லாதோர் என்றில்லாமல், கிடைத்ததைப் பகிர்ந்துகொண்டு, எல்லா உயிர்களும் வாழ வேண்டும் என்ற சமநிலைக் கொள்கைக்கு ஈ.டானது வேறு எதுவுமே இல்லை.


குறள் 323: 
ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன் 
பின்சாரப் பொய்யாமை நன்று. 


அறங்களின் வரிசையில் முதலில் கொல்லாமையும் அதற்கடுத்துப் பொய்யாமையும் இடம் பெறுகின்றன.


குறள் 324: 
நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும் 
கொல்லாமை சூழும் நெறி. 


விளக்கம் : 
எந்த உயிரையும் கொல்லக் கூடாது எனும் நெறி காப்பதுதான் நல்லற வழி எனப்படும்.


குறள் 325: 
நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்  
கொல்லாமை சூழ்வான் தலை. 


விளக்கம் : 
உலகியல் நிலையை வெறுத்துத் துறவு பூண்டவர் எல்லோரையும்விடக் கொலையை வெறுத்துக் கொல்லாமையைக் கடைப்பிடிப்பவரே சிறந்தவராவார்.


குறள் 326: 
கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்  
செல்லாது உயிருண்ணுங் கூற்று. 


விளக்கம் : 
கொலை செய்யாமையை வாழ்வில் அறநெறியாகக் கொண்டவரின் பெருமையை வியந்து, சாவுகூட அவர் உயிரைப் பறிக்கத் தயங்கி நிற்கும்.


குறள் 327: 
தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது 
இன்னுயிர் நீக்கும் வினை. 


விளக்கம் : 
தன்னுயிரே போவதாக இருப்பினும்கூட அதற்காக இன்னொரு உயிரைப் போக்கும் செயலில் ஈடுபடக்கூடாது.


குறள் 328: 
நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்  
கொன்றாகும் ஆக்கங் கடை. 


 பெரிதாக நன்மை தரக்கூடிய அளவுக்கு ஒரு கொலை பயன்படக் கூடுமெனினும், நல்ல பண்புடைய மக்கள், அந்த நன்மையை இழிவானதாகவே கருதுவார்கள்.


குறள் 329: 
கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர் 
புன்மை தெரிவா ரகத்து. 

விளக்கம் : 
பகுத்தறிவை இழந்து செயல்படும் கொலைகாரர்களைச் சான்றோர
உள்ளம், இழிதகைப் பிறவிகளாகவே கருதும்.

குறள் 330: 
உயிர் உடம்பின் நீக்கியார் என்ப செயிர்
உடம்பின் செல்லாத்தீ வாழ்க்கை  
யவர். 

விளக்கம் : 
வறுமையும் நோயும் மிகுந்த தீய வாழ்க்கையில் உழல்வோர், ஏற்கனவே கொலைகள் பல செய்தவராக இருப்பர் என்று முன்னோர் கூறுவர்.




எனது தவறுகளையும் குறைகளையும் சுட்டிக் காட்டுங்கள். தொடரும்....samy..............

திருக்குறளும் அதன் விளக்கமும்}}}}}}301-310

அறத்துப்பால் துறவறவியல் வெகுளாமை;;;;;;;;;;;;;;;;


குறள் 301: 
செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
காக்கினென் காவாக்கா லென்.



விளக்கம் :  
தன் சினம் பலிதமாகுமிடத்தில் சினம் கொள்ளாமல் இருப்பவனே சினங்காப்பவன்; பலிக்காத இடத்தில் சினத்தைக் காத்தால் என்ன? காக்காவிட்டால் என்ன?


குறள் 302: 
செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்
இல்லதனின் தீய பிற.



விளக்கம் :  
வலியோரிடம் சினம் கொண்டால், அதனால் கேடு விளையும். மெலியோரிடம் சினம் கொண்டாலும் அதைவிடக் கேடு வேறொன்றுமில்லை.


குறள் 303: 
மறத்தல் வெகுளியை யார்மாட்டுந் தீய
பிறத்தல் அதனான் வரும்.



விளக்கம் :  
யார்மீது சினம் கொண்டாலும் அதை மறந்துவிட வேண்டும். இல்லாவிட்டால் அந்தச் சினமே தீய விளைவுகளுக்குக் காரணமாகும்.

குறள் 304: 
நகையும் உவகையுங் கொல்லுஞ் சினத்தின்
பகையும் உளவோ பிற.

விளக்கம் :  
சினம் கொள்கிறவர்களுக்கு முகமலர்ச்சி மாத்திரமின்றி மனமகிழ்ச்சியும் மறைந்து போய் விடும்.

குறள்305: 
தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம்.

விளக்கம் :  
ஒருவன் தன்னைத்தானே காத்துக் கொள்ள வேண்டுமானால், சினத்தைக் கைவிட வேண்டும். இல்லையேல் சினம், அவனை அழித்துவிடும்.

குறள் 306: 
சினமென்னுஞ் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும்.

விளக்கம் :  
சினங்கொண்டவரை அழிக்கக் கூடியதாகச் சினமென்னும் தீயே இருப்பதால், அது அவரை மட்டுமின்றி, அவரைப் பாதுகாக்கும் தோணி போன்ற சுற்றத்தையும் அழித்துவிடும்.

குறள்307: 
சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.

விளக்கம் :  
நிலத்தைக் கையால் அறைந்தவனுக்கு அவன் கைதான் வலிக்கும். அது போலத்தான் சினத்தைப் பண்பாகக் கொண்டவன் நிலையும் ஆகும்.

குறள்308: 
இணரெரி தோய்வன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று.

விளக்கம் :  
தீயினால் சுட்டெரிப்பது போன்ற துன்பங்களை ஒருவன் தொடர்ந்து செய்தாலும் அதற்காக வருந்தி அவன் உறவு கொள்ள வரும் போது சினங்கொள்ளாமல் இருப்பதே நல்லது.

குறள்309: 
உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி யெனின்.

விளக்கம் :  
உள்ளத்தால் சினங்கொள்ளாதவனாக இருந்தால் எண்ணியவற்றையெல்லாம் உடனடியாகப் பெற முடியும்.

குறள் 310: 
இறந்தார் இறந்தா ரனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை.

விளக்கம் :  
எல்லையற்ற சினம் கொள்வார் இறந்தவர்க்கு ஒப்பாவார். சினத்தை அறவே துறந்தவர் துறவிக்கு ஒப்பாவார்....




எனது தவறுகளையும் குறைகளையும் சுட்டிக் காட்டுங்கள். தொடரும்....samy..............

செவ்வாய், டிசம்பர் 6

திருக்குறளும் அதன் விளக்கமும்}}}}}}291-300

அறத்துப்பால் துறவறவியல் வாய்மை;;;;;;;;;;;;;

குறள் 291: 
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் 
தீமை இலாத சொலல்.

விளக்கம் :  
பிறருக்கு எள்முனையளவு தீமையும் ஏற்படாத ஒரு சொல்லைச் சொல்வதுதான் வாய்மை எனப்படும்.

குறள் 292: 
பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த 
நன்மை பயக்கும் எனின்.

விளக்கம் :  
குற்றமற்ற நன்மையை விளைவிக்கக் கூடுமானால் பொய்யான சொல்லும்கூட வாய்மை என்று கூறத்தக்க இடத்தைப் பெற்றுவிடும்.


குறள் 293: 
தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் 
தன்நெஞ்சே தன்னைச் சுடும்.

விளக்கம் :  
மனச்சாட்சிக்கு எதிராகப் பொய் சொல்லக்கூடாது; அப்படிச் சொன்னால்,சொன்னவரின் மனமே அவரைத் தண்டிக்கும்.

குறள் 294: 
உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார் 
உள்ளத்து ளெல்லாம் உளன். 

விளக்கம் :  
மனத்தால்கூடப் பொய்யை நினைக்காமல் வாழ்பவர்கள், மக்கள் மனத்தில் நிலையான இடத்தைப் பெறுவார்கள்.

குறள் 295: 
மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு 
தானஞ்செய் வாரின் தலை. 

விளக்கம் :  
உதட்டளவில் இன்றி உளமார வாய்மை பேசுகிறவர்கள் தவமும், தானமும் செய்கின்றவர்களைவிட உயர்ந்தவர்களாவார்கள்.

குறள் 296: 
பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை 
எல்லா அறமுந் தரும். 

விளக்கம் :  
பொய் இல்லாமல் வாழ்வது போன்ற புகழ் மிக்க வாழ்வு வேறு எதுவுமில்லை; என்றும் நீங்காத அறவழி நலன்களை அளிப்பது அந்த வாழ்வேயாகும்.

குறள் 297: 
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற 
செய்யாமை செய்யாமை நன்று. 

விளக்கம் :  
செய்யக்கூடாததைச் செய்யாததால் விளையும் நன்மையைவிடப் பொய் கூறாத பண்பு பொய்த்துப் போகாமல் கடைப்பிடிக்கும் அறவழி நன்மை தருவதாகும்.

குறள் 298:
புறள்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை 
வாய்மையால் காணப் படும்.

விளக்கம் :  
நீரில் குளிப்பதால் உடலின் அழுக்கு மட்டுமே நீங்கும்; மனம் அழுக்குப்படாமல் தூய்மையுடன் விளங்கிட, சொல்லிலும் செயலிலும் வாய்மை வேண்டும்.

குறள் 299: 
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் 
பொய்யா விளக்கே விளக்கு. 

விளக்கம் :  
புறத்தின் இருளைப் போக்கும் விளக்குகளைவிட அகத்தின் இருளைப் போக்கும் பொய்யாமை எனும் விளக்கே ஒருவனை உயர்ந்தோன் எனக் காட்டும் ஒளிமிக்க விளக்காகும்.


குறள் 300: 
யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும் 
வாய்மையின் நல்ல பிற. 

விளக்கம் :  
வாய்மையைப் போல் சிறந்த பண்பு வேறொன்றுமே இல்லை என்பதுதான் ஆராய்ந்து உணரப்பட்ட உண்மையாகும்.


எனது தவறுகளையும் குறைகளையும் சுட்டிக் காட்டுங்கள். தொடரும்....samy..............

ஞாயிறு, டிசம்பர் 4

திருக்குறள் இசைத்தமிழ் - இசைக் குறுவட்டுகள்- இலவமாகப் பதிவிறக்கம் செய்ய.........

இவை எனக்கு கிடைத்தவை இன்னும் உள்ளது உங்களுக்கு கிடைத்தால் அனுப்பி உதவும்  நன்றி ;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;samy


இப்பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்புக்களைப் பயன்படுத்தி இசைக் கோப்புக்களை இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


குறுவட்டு - 1

குறுவட்டு - 2

குறுவட்டு - 3

குறுவட்டு - 4

குறுவட்டு - 5

குறுவட்டு - 6

குறிப்பு: பாடல்களைப் பதிவிறக்கம் செய்ய, கொடுக்கப்பட்டுள்ள பாடல் இணைப்பில் வலமாகச் சொடுக்கி பின் "Save Target As..." அல்லது "Save Link As..." என்ற கட்டளையைத் தெரிவு செய்து தங்கள் கணினியில் சேமிக்கவும்.

இவை எனக்கு கிடைத்தவை இன்னும் உள்ளது உங்களுக்கு கிடைத்தால் அனுப்பி உதவும்  நன்றி ;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;samy;;;;;;;;;;;;;;;;;;;;