சனி, டிசம்பர் 10

திருக்குறளும் அதன் விளக்கமும்}}}}}}311-330

அறத்துப்பால் துறவறவியல் இன்னாசெய்யாமை ;;;;;;;;;;;


குறள் 311: 
சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா 
செய்யாமை மாசற்றார் கோள். 


விளக்கம் : 
 மிகுந்த செழிப்பைத் தருகின்ற செல்வத்தைப் பெறக் கூடுமென்றாலும் அதன் பொருட்டுப் பிறருக்குப் கேடு செய்யாமலிருப்பதே மாசற்றவர்களின் கொள்கையாகும்.


குறள் 312: 
கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா  
செய்யாமை மாசற்றார் கோள். 


விளக்கம் : 
சினங்கொண்டு சொல்லாலோ செயலாலோ ஒருவன் துன்பம் தரும்போது அந்தத் துன்பத்தை அவனுக்குத் திரும்பச் செய்யாமல் தாங்கிக் கொள்வதே சிறந்த மனிதரின் கொள்கையாகும்.


குறள் 313: 
செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின் 
உய்யா விழுமந் தரும். 


விளக்கம் : 
யாருக்கும் கேடு செய்யாமல் இருப்பவருக்குப் பகைவர் கேடு செய்துவிட்டால் அதற்குப் பதிலாக அவருக்கு வரும் கேடு மீளாத் துன்பம் தரக் கூடியதாகும்.


குறள் 314: 
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண 
நன்னயஞ் செய்து விடல். 


விளக்கம் : 
நமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டிப்பதற்குச் சரியான வழி, அவர் வெட்கித் தலைகுனியும்படியாக அவருக்கு நன்மை செய்வதுதான்.




குறள் 315: 
அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய் 
தந்நோய்போல் போற்றாக் கடை. 


விளக்கம் : 
பிற உயிர்களுக்கு வரும் துன்பத்தைத் தம் துன்பம் போலக் கருதிக் காப்பாற்ற முனையாதவர்களுக்கு அறிவு இருந்தும் அதனால் எந்தப் பயனுமில்லை.


குறள் 316: 
இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை 
வேண்டும் பிறன்கண் செயல். 


விளக்கம் : 
ஒருவன் தன்னுடைய வாழ்க்கையில் துன்பமானவை என்று அனுபவித்து அறிந்தவற்றை, மற்றவர்க்குச் செய்யாமலிருக்க வேண்டும்.


குறள் 317: 
எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம் 
மாணாசெய் யாமை தலை. 

விளக்கம் : 
எவ்வளவிலும், எப்பொழுதும், எவரையும் இழிவுபடுத்தும் செயலை மனத்தால் கூட நினைக்காமல் இருப்பதே முதன்மையான சிறப்பாகும். 

குறள் 318: 
தன்னுயிர்ககு ஏன்னாமை தானறிவான் என்கொலோ 
மன்னுயிர்க்கு இன்னா செயல். 

விளக்கம் : 
பிறர் தரும் துன்பத்தால் தனக்கேற்படும் துன்பத்தை உணர்ந்தவன் அந்தத் துன்பத்தைப் பிற உயிர்களுக்குத் தரவும் கூடாதல்லவா?.


குறள் 319: 
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா  
பிற்பகல் தாமே வரும். 

விளக்கம் : 
பிறருக்குத் தீங்கு விளைவித்துவிட்டோம் என்று ஒருவர் மகிழ்ந்து கொண்டிருக்கும்போதே, அதேபோன்ற தீங்கு அவரையே தாக்கும்.

குறள் 320: 
நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார் 
நோயின்மை வேண்டு பவர். 

விளக்கம் : 
தீங்கு செய்தவருக்கே தீங்குகள் வந்து சேரும்; எனவே தீங்கற்ற வாழ்வை விரும்புகிறவர்கள், பிறருக்குத் தீங்கிழைத்தல் கூடாது.


அறத்துப்பால் துறவறவியல் கொல்லாமை;;;;;;;;;;;;;;;;;;;;;


குறள் 321: 
அறவினை யாதெனின் கொல்லாமை கோறல் 
பிறவினை எல்லாந் தரும். 


விளக்கம் : 
எந்த உயிரையும் கொல்லாதிருப்பதே அறச்செயலாகும். கொலை செய்தல் தீயவினைகள் அனைத்தையும் விளைவிக்கும்.


குறள் 322: 
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் 
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை. 


விளக்கம் : 
இருப்போர் இல்லாதோர் என்றில்லாமல், கிடைத்ததைப் பகிர்ந்துகொண்டு, எல்லா உயிர்களும் வாழ வேண்டும் என்ற சமநிலைக் கொள்கைக்கு ஈ.டானது வேறு எதுவுமே இல்லை.


குறள் 323: 
ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன் 
பின்சாரப் பொய்யாமை நன்று. 


அறங்களின் வரிசையில் முதலில் கொல்லாமையும் அதற்கடுத்துப் பொய்யாமையும் இடம் பெறுகின்றன.


குறள் 324: 
நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும் 
கொல்லாமை சூழும் நெறி. 


விளக்கம் : 
எந்த உயிரையும் கொல்லக் கூடாது எனும் நெறி காப்பதுதான் நல்லற வழி எனப்படும்.


குறள் 325: 
நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்  
கொல்லாமை சூழ்வான் தலை. 


விளக்கம் : 
உலகியல் நிலையை வெறுத்துத் துறவு பூண்டவர் எல்லோரையும்விடக் கொலையை வெறுத்துக் கொல்லாமையைக் கடைப்பிடிப்பவரே சிறந்தவராவார்.


குறள் 326: 
கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்  
செல்லாது உயிருண்ணுங் கூற்று. 


விளக்கம் : 
கொலை செய்யாமையை வாழ்வில் அறநெறியாகக் கொண்டவரின் பெருமையை வியந்து, சாவுகூட அவர் உயிரைப் பறிக்கத் தயங்கி நிற்கும்.


குறள் 327: 
தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது 
இன்னுயிர் நீக்கும் வினை. 


விளக்கம் : 
தன்னுயிரே போவதாக இருப்பினும்கூட அதற்காக இன்னொரு உயிரைப் போக்கும் செயலில் ஈடுபடக்கூடாது.


குறள் 328: 
நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்  
கொன்றாகும் ஆக்கங் கடை. 


 பெரிதாக நன்மை தரக்கூடிய அளவுக்கு ஒரு கொலை பயன்படக் கூடுமெனினும், நல்ல பண்புடைய மக்கள், அந்த நன்மையை இழிவானதாகவே கருதுவார்கள்.


குறள் 329: 
கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர் 
புன்மை தெரிவா ரகத்து. 

விளக்கம் : 
பகுத்தறிவை இழந்து செயல்படும் கொலைகாரர்களைச் சான்றோர
உள்ளம், இழிதகைப் பிறவிகளாகவே கருதும்.

குறள் 330: 
உயிர் உடம்பின் நீக்கியார் என்ப செயிர்
உடம்பின் செல்லாத்தீ வாழ்க்கை  
யவர். 

விளக்கம் : 
வறுமையும் நோயும் மிகுந்த தீய வாழ்க்கையில் உழல்வோர், ஏற்கனவே கொலைகள் பல செய்தவராக இருப்பர் என்று முன்னோர் கூறுவர்.




எனது தவறுகளையும் குறைகளையும் சுட்டிக் காட்டுங்கள். தொடரும்....samy..............

2 கருத்துகள்:

  1. நான் தினமும் பார்க்கும் இணையத்தளம் http://www.valaitamil.com/thirukkural.php திருக்குறளை மிக சிறப்பாக தொகுத்துள்ளது. பார்த்து மகிழவும்

    பதிலளிநீக்கு
  2. Casino games and online poker - JSHub
    Get 의정부 출장샵 your $500 FREE bonus 고양 출장샵 with Casino Games and Online Poker for FREE. No deposit 경상남도 출장안마 Required. Casino Games at 광명 출장마사지 JS 남양주 출장마사지 Hub | Best in Slot Games.

    பதிலளிநீக்கு