புதன், டிசம்பர் 14

திருக்குறளும் அதன் விளக்கமும்}}}}}}331-340


அறத்துப்பால் துறவறவியல் நிலையாமை;;;;;;


குறள் 331:
நில்லாத வற்றை நிலையின என்றுணரும் 
புல்லறி வாண்மை கடை.

உரை:
நிலையற்றவைகளை நிலையானவை என நம்புகின்ற அறியாமை மிக இழிவானதாகும்.

குறள் 332:
கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம் 
போக்கும் அதுவிளிந் தற்று.

உரை:
சேர்த்து வைத்த பணமும் சொத்தும் ஒருவரை விட்டுப் போவது, கூத்து முடிந்ததும் மக்கள் அரங்கத்தை விட்டுக் கலைந்து செல்வதைப் போன்றதாகும்.

 குறள் 333:
அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால் 
அற்குப ஆங்கே செயல்.

உரை:
நம்மை வந்தடையும் செல்வம் நிலையற்றது என்பதை உணர்ந்து அதைக் கொண்டு அப்பொழுதே நிலையான நற்செயல்களில் ஈடுபட வேண்டும்.



 குறள் 334:
நாளென ஒன்றுபோற் காட்டி உயிர்ஈரும் 
வாளது உணர்வார்ப் பெறின்.

 உரை:
வாழ்க்கையைப் பற்றி உணர்ந்தவர்கள், நாள் என்பது ஒருவரின் ஆயுளை அறுத்துக் குறைத்துக் கொண்டேயிருக்கும் வாள் என்று அறிவார்கள்.

குறள் 335:
நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை 
மேற்சென்று செய்யப் படும்.


உரை:
வாழ்க்கையின் நிலையாமையை உணர்ந்து நம் உயிர் இருக்கும் போதே உயர்ந்த நற்பணிகளை ஆற்றிட முனைய வேண்டும்.




 குறள் 336:
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் 
பெருமை உடைத்துஇவ் வுலகு.


 உரை:

இந்த உலகமானது, நேற்று உயிருடன் இருந்தவரை இன்று இல்லாமல் செய்து விட்டோம் என்ற அகந்தையைப் பெருமையாக் கொண்டதாகும்.




 குறள் 337:
ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப 
கோடியும் அல்ல பல.

உரை:
ஒரு பொழுதுகூட வாழ்க்கையைப் பற்றி உண்மையைச் சிந்தித்து அறியாதவர்களே, ஆசைக்கோர் அளவின்றி மனக் கோட்டைகள் கட்டுவார்கள்.

 குறள் 338:
குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே 
உடம்பொடு உயிரிடை நட்பு.

உரை:
உடலுக்கும் உயிருக்கும் உள்ள உறவு முட்டைக்கும் பறவைக் குஞ்சுக்கும் உண்டான உறவு போன்றதுதான்.



 குறள் 339:
உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி 
விழிப்பது போலும் பிறப்பு.

 உரை:
நிலையற்ற வாழ்க்கையில், உறக்கத்திற்குப் பிறகு விழிப்பதைப் போன்றது பிறப்பு; திரும்ப விழிக்க முடியாத மீளா உறக்கம் கொள்வதே இறப்பு.



 குறள் 340:
புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள் 
துச்சில் இருந்த உயிர்க்கு.

உரை;
உடலுடன் தங்கியுள்ள உயிருக்கு அதனைப் பிரிந்தால் வேறு புகலிடம் கிடையாது.

 எனது தவறுகளையும் குறைகளையும் சுட்டிக் காட்டுங்கள். தொடரும்....samy..............

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக