அறத்துப்பால் - துறவறவியல் - அவாவறுத்தல்';;;;;;;;;;;;;;;;
குறள் 361:
குறள் 362:
குறள் 363:
குறள் 364:
குறள் 365:
குறள் 366:
குறள் 367:
குறள் 368:
குறள் 369:
குறள் 370:
அறத்துப்பால் - ஊழியல் - ஊழ்;;;;;;;;
குறள் 371:
குறள் 372:
குறள் 373:
குறள் 374:
குறள் 375:
குறள் 376:
குறள் 377:
குறள் 378:
குறள் 379:
குறள் 380:
எனது தவறுகளையும் குறைகளையும் சுட்டிக் காட்டுங்கள். தொடரும்....samy..............
குறள் 361:
அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்உரை:
தவாஅப் பிறப்பீனும் வித்து.
ஆசையை, எல்லா உயிர்களிடமும், எல்லாக் காலத்திலும் தவறாமல் தோன்றி முளைக்கும் விதை என்று கூறலாம்.
குறள் 362:
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றதுஉரை:
வேண்டாமை வேண்ட வரும்.
விரும்புவதானால் பிறக்காமலே இருந்திருக்கவேண்டும் என்று ஒருவன் எண்ணுகிற அளவுக்கு ஏற்படுகிற துன்ப நிலை, ஆசைகளை ஒழிக்காவிடில் வரும்.
குறள் 363:
வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லைஉரை:
ஆண்டும் அஃதொப்பது இல்.
தீமை விளைவிக்கும் ஆசைகளை வேண்டாம் என்று புறக்கணிப்பதைப் போன்ற செல்வம் இங்கு எதுவுமில்லை; வேறு எங்கும் கூட அத்தகைய ஒப்பற்ற செல்வம் இல்லையென்றே கூறலாம்.
குறள் 364:
தூஉய்மை என்பது அவாவின்மை மற்றதுஉரை:
வாஅய்மை வேண்ட வரும்.
தூய்மை என்பது பேராசையற்ற தன்மையாகும். அத்தூய்மை வாய்மையை நாடுவோர்க்கே வாய்க்கும்.
குறள் 365:
அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார்உரை:
அற்றாக அற்றது இலர்.
ஆசையனைத்தும் விட்டவரே துறவி எனப்படுவார். முற்றும் துறவாதவர், தூய துறவியாக மாட்டார்.
குறள் 366:
அஞ்சுவ தோரும் அறனே ஒருவனைஉரை:
வஞ்சிப்ப தோரும் அவா.
ஒருவரை வஞ்சித்துக் கெடுப்பதற்குக் காரணமாக இருப்பது ஆசையேயாகும். எனவே, ஆசைக்கு அடிமையாகக் கூடாது என்ற அச்சத்துடன் வாழ வேண்டும்.
குறள் 367:
அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினைஉரை:
தான்வேண்டு மாற்றான் வரும்.
கெடாமல் வாழ்வதற்குரிய நிலை, ஒருவன் விரும்புமாறு வாய்ப்பதற்கு, அவன் பேராசைக் குணத்தை முற்றிலும் ஒழித்தவனாக இருக்க வேண்டும்.
குறள் 368:
அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல்உரை:
தவாஅது மேன்மேல் வரும்.
ஆசை இல்லாதவர்களுக்குத் துன்பம் இல்லை. ஆசை உண்டானால், அதைத் தொடர்ந்து துன்பமும் மேலும் மேலும் வந்து கொண்டிருக்கும்.
குறள் 369:
இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்உரை:
துன்பத்துள் துன்பங் கெடின்.
பெருந்துன்பம் தரக்கூடிய பேராசை ஒழிந்தால் வாழ்வில் இன்பம் விடாமல் தொடரும்.
குறள் 370:
ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையேஉரை:
பேரா இயற்கை தரும்.
இயல்பாகவே எழும் அடங்காத பேராசையை அகற்றி வாழும் நிலை, நீங்காத இன்பத்தை இயல்பாகவே தரக்கூடியதாகும்.
அறத்துப்பால் - ஊழியல் - ஊழ்;;;;;;;;
குறள் 371:
ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்உரை:
போகூழால் தோன்றும் மடி.
ஆக்கத்திற்கான இயற்கை நிலை சோர்வு தலை காட்டாத ஊக்கத்தைக் கொடுக்கும். ஊக்கத்தின் அழிவுக்கான இயற்கைநிலை சோம்பலை ஏற்படுத்தும்.
குறள் 372:
பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்உரை:
ஆகலூழ் உற்றக் கடை.
அழிவுதரும் இயற்கை நிலை, அறியாமையை உண்டாக்கும்; ஆக்கம் தரும் இயற்கை நிலை, அதற்கேற்ப அறிவை விரிவாக்கும்.
குறள் 373:
நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்உரை:
உண்மை யறிவே மிகும்.
கூரிய அறிவு வழங்கக் கூடிய நூல்களை ஒருவர் கற்றிருந்த போதிலும் அவரது இயற்கை அறிவே மேலோங்கி நிற்கும்.
குறள் 374:
இருவேறு உலகத்து இயற்கை திருவேறுஉரை:
தெள்ளிய ராதலும் வேறு.
உலகின் இயற்கை நிலை இரு வேறுபட்டதாகும். ஒருவர் செல்வமுடையவராகவும், ஒருவர் அறிவுடையவராகவும் இருப்பதே அந்த வேறுபாடாகும்.
குறள் 375:
நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும்உரை:
நல்லவாம் செல்வம் செயற்கு.
நல்ல செயல்களை ஆற்ற முற்படும்போது அவை தீமையில் போய் முடிந்துவிடுவதும், தீய செயல்களை ஆற்றிட முனையும்போது அவை நல்லவைகளாக முடிந்து விடுவதும் இயற்கை நிலை எனப்படும்.
குறள் 376:
பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்உரை:
சொரியினும் போகா தம.
தனக்கு உரிமையல்லாதவற்றை எவ்வளவுதான் பாதுகாப்பாக வைத்தாலும் அவை தங்காமல் போய்விடக் கூடும்; உரிமையுள்ளவற்றை எங்கே கொண்டு போய்ப் போட்டாலும் அவை எங்கும் போகமாட்டா.
குறள் 377:
வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடிஉரை:
தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது.
வகுத்து முறைப்படுத்திய வாழ்க்கை நெறியை ஒட்டி நடக்கா விட்டால் கோடிப் பொருள் குவித்தாலும், அதன் பயனை அனுபவிப்பது என்பது அரிதேயாகும்.
குறள் 378:
துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பாலஉரை:
ஊட்டா கழியு மெனின்.
நுகர்வதற்குரியது எதுவுமில்லை என்ற உறுதியினால், தம்மை வருத்தக்கூடிய உணர்வுகள் வந்து வருத்தாமல் நீங்கிவிடுமானால் துறவறம் மேற்கொள்வர்.
குறள் 379:
நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்உரை:
அல்லற் படுவ தெவன்.
நன்மையும் தீமையும் வாழ்க்கையில் மாறி மாறி வரும். நன்மை கண்டு மகிழ்கிறவர்கள், தீமை விளையும்போது மட்டும் மனம் கலங்குவது ஏன்?.
குறள் 380:
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்றுஉரை:
சூழினுந் தான்முந் துறும்.
இயற்கை நிலையை மாற்றி மற்றொரு செயற்கை நிலையை அமைத்திட முனைந்தாலும், இயற்கை நிலையே முதன்மையாக வந்து நிற்பதால் அதைவிட வலிமையானவையாக வேறு எவை இருக்கின்றன?.
எனது தவறுகளையும் குறைகளையும் சுட்டிக் காட்டுங்கள். தொடரும்....samy..............
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக