அறத்துப்பால் - துறவறவியல் - துறவு;;;;;;;;;;;;;;;;;;;;;
குறள் 341:
குறள் 342:
குறள் 343:
குறள் 344:
குறள் 345:
குறள் 346:
குறள் 347:
குறள் 348:
குறள் 349:
குறள் 350:
அறத்துப்பால் - துறவறவியல் - மெய்யுணர்தல்;;;;;;;;;;;;;
குறள் 351:
குறள் 352:
குறள் 353:
குறள் 354:
குறள் 355:
குறள் 356:
குறள் 357:
குறள் 358:
குறள் 359:
குறள் 360:
எனது தவறுகளையும் குறைகளையும் சுட்டிக் காட்டுங்கள். தொடரும்....samy..............
குறள் 341:
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்உரை:
அதனின் அதனின் இலன்.
ஒருவன் பல வகையான பற்றுகளில் எந்த ஒன்றை விட்டு விட்டாலும், குறிப்பிட்ட அந்தப் பற்று காரணமாக வரும் துன்பம், அவனை அணுகுவதில்லை.
குறள் 342:
வேண்டின்உண் டாகத் துறக்க துறந்தபின்உரை:
ஈண்டுஇயற் பால பல.
ஒருவனைத் துன்பம் துளைத்தெடுக்காமல் இருக்க எல்லாம் இருக்கும் போதே அவற்றைக் துறந்து விடுவானேயானால், அவன் உலகில் பெறக்கூடிய இன்பங்கள் பலவாகும்.
குறள் 343:
அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்உரை:
வேண்டிய வெல்லாம் ஒருங்கு.
ஐம் புலன்களையும் அடக்கி வெல்வதும், அப்புலன்கள் விரும்புகின்றவற்றை யெல்லாம் விட்டுவிடுவதும் துறவுக்கு இலக்கணமாகும்.
குறள் 344:
இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமைஉரை:
மயலாகும் மற்றும் பெயர்த்து.
ஒரு பற்றும் இல்லாதிருத்தலே துறவுக்கு ஏற்றதாகும். ஒன்றன் மேல் பற்று வைப்பினும், அது மேன்மேலும் பற்றுகளைப் பெருக்கி மயங்கச் செய்துவிடும்.
குறள் 345:
மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்உரை:
உற்றார்க்கு உடம்பும் மிகை.
பிறந்ததால் ஏற்படும் துன்பத்தைப் போக்க முயல்கின்ற துறவிகளுக்கு அவர்களின் உடம்பே மிகையான ஒன்றாக இருக்கும்போது, அதற்கு மேலும் வேறு தொடர்பு எதற்காக?.
குறள் 346:
யான் எனது என்னும் செருக்குஉரை:
அறுப்பான் வானோர்க்கு உயர்ந்த உலகம்
புகும்.
யான், எனது என்கின்ற ஆணவத்தை அறவே விலக்கி விட்டவன், வான்புகழையும் மிஞ்சுகின்ற உலகப் புகழுக்கு உரியவனாவான்.
குறள் 347:
பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்உரை:
பற்றி விடாஅ தவர்க்கு.
பற்றுகளைப் பற்றிக்கொண்டு விடாதவர்களைத் துன்பங்களும் விடாமல் பற்றிக் கொள்கின்றன.
குறள் 348:
தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கிஉரை:
வலைப்பட்டார் மற்றை யவர்.
அரைகுறையாக இல்லாமல் அனைத்தும் துறந்தவர்களே உயர்ந்த நிலையை அடைவார்கள். அவ்வாறு துறவாதவர்கள் அறியாமையென்னும் வலையில் சிக்கியவர்களாவார்கள்.
குறள் 349:
பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்றுஉரை:
நிலையாமை காணப் படும்.
பற்றுகளைத் துறந்துவிட்டால், பிறப்பில் ஏற்படும் இன்ப துன்பங்கள் வருவதில்லை. இல்லையேல், அந்த இன்ப துன்பங்கள் மாறிமாறி வரக்கூடிய நிலையாமை தோன்றும்.
குறள் 350:
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்உரை:
பற்றுக பற்று விடற்கு.
எதிலும் பற்றில்லாதவராக யார் இருக்கிறாரோ அவரிடம் மட்டும் பற்றுக் கொள்ள வேண்டும். துறவறத்தினர் தம் பற்றுகளை விட்டொழிப்பதற்கு அத்தகையோரிடம் கொள்ளும் பற்றுதான் துணை நிற்கும்.
அறத்துப்பால் - துறவறவியல் - மெய்யுணர்தல்;;;;;;;;;;;;;
குறள் 351:
பொய்யான ஒரு பொருளை மெய்ப்பொருள் என்று மயங்கி நம்புகிறவனின் வாழ்க்கை சிறப்பாக அமையாது.உரை:
நிலையற்றவைகளை நிலையானவை என நம்புகின்ற அறியாமை மிக இழிவானதாகும்.
குறள் 352:
இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கிஉரை:
மாசறு காட்சி யவர்க்கு.
மயக்கம் தெளிந்து மாசற்ற உண்மையை உணர்ந்தால் அறியாமை அகன்று நலம் தோன்றும்.
குறள் 353:
ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்உரை:
வானம் நணிய துடைத்து.
ஐயப்பாடுகளைத் தெளிந்த ஆராய்ச்சி வாயிலாகத் தீர்த்துக் கொண்டவர்களுக்குப் பூமியைவிட வானம் மிக அருகில் இருப்பதாகக் கருதுகின்ற ஊக்கம் ஏற்படும்.
குறள் 354:
ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றேஉரை:
மெய்யுணர்வு இல்லா தவர்க்கு.
உண்மையைக் கண்டறிந்து தெளிவடையாதவர்கள், தமது ஐம்புலன்களையும் அடக்கி வெற்றி கண்டிருந்தாலும் கூட அதனால் அவர்களுக்கு எந்தப் பயனும் இல்லை.
குறள் 355:
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்உரை:
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
வெளித்தோற்றத்தைப் பார்த்து ஏமாந்து விடாமல், அதுபற்றிய உண்மையை உணர்வதுதான் அறிவுடைமையாகும்.
குறள் 356:
கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்உரை:
மற்றீண்டு வாரா நெறி.
துறவற வாழ்வுக்குத் தகுதியுடையவராகச் செய்திடும் அனைத்தையும் கற்று, உண்மைப் பொருள் உணர்ந்து அதன்படி ஒழுகுபவர், மீண்டும் இல்லற வாழ்க்கையை விரும்ப மாட்டார்கள்.
குறள் 357:
ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்உரை:
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு.
உண்மையை ஆராய்ந்து உறுதியாக உணர்பவர்கள் மீண்டும் பிறப்பு உண்டு எனக் கருத மாட்டார்கள்.
குறள் 358:
பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்உரை:
செம்பொருள் காண்பது அறிவு.
அடுத்த பிறப்பு எனக் கூறப்படும் அறியாமையைப் போக்கித் தெளிந்த உண்மையை நிலைநாட்டுவதுதான் அறிவுடைமையாகும்.
குறள் 359:
சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்உரை:
சார்தரா சார்தரு நோய்.
துன்பங்கள் நம்மைச் சாராமல் இருக்க வேண்டுமானால், அத்துன்பங்களுக்குக் காரணமானவற்றை உணர்ந்து அவற்றின் மீதுள்ள பற்றை விலக்கிக் கொள்ள வேண்டும்.
குறள் 360:
காமம் வெகுளி மயக்கம் இவ்முன்றன்உரை:
நாமம் கெடக்கெடும் நோய்.
விருப்பு, வெறுப்பு, அறியாமை இவற்றுக்கு இடம் தராதவர்களை நெருங்குகிற துன்பம் அழிந்துவிடும்.
எனது தவறுகளையும் குறைகளையும் சுட்டிக் காட்டுங்கள். தொடரும்....samy..............
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக